மாநில சுயாட்சி தொடர்பாக அறிவிப்பை சட்டப்பேரவையில் வசித்தார் முதல்வர்

Unknown
By -
0

  தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தொடர்பாக புதிய அறிவிப்பை வாசித்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாமல் கூட்டாசி கொண்ட நாடாகதான் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கினார்கள்.

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று திமுக தொடர்ந்து முழுங்கி வருகிறது.

ராஜமன்னார் தலைமையில் உயர்மட்ட குழுவை மறைந்த முதலமைச்சர் கலைஞர் அமைத்தார்.

இந்த குழுவின் முக்கிய பரிந்துரைகளை இந்த சட்டப்பேரவையில் தீர்மானமாக கலைஞர் நிறைவேற்றினார்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தற்போது மாநில சுயாட்சியை உறுதி செய்ய மத்திய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்து விரிவாக ஆராய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அசோக் வர்தன் செட்டி, திட்டக்குழு முன்னாள் துணைத்தலைவர் நாகநாதன் இதில் உறுப்பினர்களாக இருப்பர். 

2026 ஜனவரி இறுதிக்குள் இடைக்கால அறிக்கை, 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையும் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என இலக்கு.

கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டியது இன்றியமையாதது.

நீட் தேர்வு ஒரு சாராருக்கு மட்டுமே பயனுள்ளதாகவும், பயிற்சி மையங்களை ஊக்குவிக்கும் வண்ணமும் கிராமப்புற, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. 

மாநில பட்டியலில் இருந்த கல்வி, ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதால் மும்மொழி கொள்கை என்னும் போர்வையில் இந்தி மொழியை மறைமுகமாக திணிக்க முற்படுகிறது.


إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)