ப்ளஸ் 2 தேர்வு எழுதிய 8 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.
இப்பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், 46 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இப்பணிகள் வரும் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், மே 9ஆம் தேதி ரிசல்ட் வெளியாகும் எனவும் கூறியுள்ளனர்.