பழம் பெரும் திரைப்பட நடிகர்
சித்தூர் வி .நாகையா அவர்களின்
121 வது பிறந்தநாள் இன்று .
தமிழ், தெலுங்குத் திரைவானில் சிறந்த ஒரு குணச்சித்திர நடிகர் மட்டுமல்லாது பாடகர்,எழுத்தாளர்,இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.தமிழில் 1953-இல் என் வீடு என்ற படத்தை இயக்கியுள்ளார்.
தெலுங்கில் 200 படங்களிலும்
160 தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர்களில் முதன்முதலாக 1965-இல் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். கன்னடம், மலையாளம், இந்திப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். 28.03.1904-அன்று ஆந்திராவில் குப்பம் என்ற ஊரில் தெலுங்குப் பேசும் பிராமண குடும்பத்தில் ராமலிங்க ஷர்மா – வெங்கட லக்ஷ்மாம்பா தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். இக்குடும்பம் சித்தூர் மாவட்டத்திலுள்ள திருப்பதிக்குக் குடிபெயர்ந்தது. அக்காலத்திலேயே பட்டப்படிப்பு [பி.ஏ.,] பயின்றவர். அரசாங்க அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றினார். பின்னர் ஆந்திரா பத்திரிகையில் இதழாளராக பணிபுரிந்தார்.
1938-ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிருகலெக்ஷ்மி’ தெலுங்குப் படத்தில் கதாநாயகி கண்ணாம்பாவின் சகோதரராக முதன் முதலாக நடித்தார்.
தொடர்ந்து
’வந்தே மாதரம்’ [1939],
சுமங்கலி [1940],
தேவதா [1941],
தமிழில் அசோக்குமார்’ [1941],
பக்த போதனா [1942],
’சொர்க்க சீமா’ [1945],
‘தியாகய்யா’ [1946]
போன்ற படங்களில் தமிழிலும் தெலுங்கிலும் சம காலத்தில் நடித்தார்.
தனது 69-ஆவது வயதில் 30.12.1973 அன்று காலமானார்.
இந்த பிறந்தநாளில் இந்த மாபெரும் கலைஞனை நினைவு கூறுவோம்
إرسال تعليق
0تعليقات