நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
வயிற்று வலி காரணமாக மாணவியை ஆசிரியர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது குழந்தை பிறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஆவாரங்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு இப்பகுதியை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராசிபுரம் ஆர்.புதுப்பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சண்முகம் (பெயர் மாற்றம்) கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் பள்ளிபாளையம் ஓட்டமேத்தி பகுதிக்கு சென்றார்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது 16 வயது மகளை 11ம் வகுப்பு படிக்க பள்ளிபாளையம் அரசு பள்ளியில் சேர்த்தார். அதன் பிறகு சக மாணவர்களுடன் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாணவியின் வயிறு சற்று வீங்கி காணப்பட்டது. மாணவியின் வயிற்றில் கட்டி இருப்பதாக பெற்றோர் நினைத்தனர்.
இந்நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று பள்ளியில் படித்து கொண்டிருந்த மாணவிக்கு நேற்று மாலை திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் மாணவியை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதையும், பிரசவ வலியில் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சில நிமிடங்களில் 2 கிலோ 800 கிராம் எடையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளிக்கு பதற்றத்துடன் வந்தனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறைக்கும் டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் குழந்தைகள் நல மருத்துவத்துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து மாணவியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து தாய், சே இருவரும் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் யாரோ மாணவியை ஆசை வார்த்தை கூறியோ அல்லது மிரட்டியோ பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் எனவும், இதன் காரணமாக மாணவி கர்ப்பமாகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதே சமயம் மாணவி இது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிந்ததாலும், வீட்டில் பிரச்னை ஏற்படும் என்பதாலும் இதுபற்றி மாணவியிடம் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மாணவிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், குழந்தையின் தந்தை யார் என மாணவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை மோசமாக உள்ளதால் சில சிகிச்சைக்கு பின் வாக்குமூலம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அதேநேரம் ராசிபுரத்தில் மாணவி குடும்பத்துடன் வசித்து வந்தபோது, அவரது வளர்ப்பு மகன் ரங்கராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி கர்ப்பமாகி இருக்கலாம்.
கருத்துரையிடுக
0கருத்துகள்