ஃபென்சல் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.. அதுவும் இந்தப் பகுதியில்.. தமிழ்நாடு வெதர்மேன் .

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் கரையை நெருங்கி வருகிறது. இதன் காரணமாக வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் வட தமிழகத்தின் பிற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதேபோல் கடலோரப் பகுதிகளிலும் கடும் கொந்தளிப்பு நிலவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, கடலூரில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் ஃபென்ஜால் புயல் எப்போது கரையை கடக்கும்? எங்கே கரையைக் கடக்கும்? அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : வானிலை அறிவிப்பு: நெருங்கியது புயல் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் ! 8 மாவட்டங்களுக்கு கனமழை

அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் அடர்ந்த மேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது. இந்த அடர்ந்த மேகங்கள் அடுத்த 12 மணி நேரத்தில் KTCC பெல்ட்டில் தொடர்ந்து மழை கொடுக்கும் என்றும், மெதுவாக நகரும் Fenjal சூறாவளி காரணமாக KTCC பகுதியில் கனமழை பெய்யும் நேரம் இது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்தார்.

KTCC பகுதியில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 60-120 மி.மீ மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார், மேலும் அடுத்த 12 முதல் 18 மணி நேரத்திற்கு கண்காணிப்பு முக்கியமானதாக இருக்கும். இந்த புயல் சென்னை-புதுச்சேரி இடையே மரக்காணத்தில் இருந்து மாமல்லபுரம் வரை கரையை கடக்கும் என தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் பட்டியுங்கள் : அதிசய வாழை மரம்… கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில்

இந்த புயல் இன்று இரவு முதல் நாளை டிசம்பர் 1ம் தேதி காலை வரை கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். புயல் கரையை கடக்கும் வரை மழை தொடரும் என்றும், புயல் கரையை கடக்கும் வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

காற்றின் வேகம் என்னவாக இருக்கும்?

ஃபென்சல் புயல் காரணமாக கடலோரப் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 70 கி.மீ., வேகத்தில் வீசும் என்றும், காற்று பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அடுத்த 12-18 மணி நேரத்திற்கு மழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தற்போது கேடிசிசி மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

0 Response to "ஃபென்சல் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.. அதுவும் இந்தப் பகுதியில்.. தமிழ்நாடு வெதர்மேன் ."

கருத்துரையிடுக

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel