தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில், திருமணம் செய்ய மறுத்ததால் மல்லிப்பட்டினத்தில் இளம் ஆசிரியையை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில், அதே சின்னமனை பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் தனது மகன் மதனுக்கு (30) திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து ரமணியிடம் தங்கள் மகன் மதனுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் மதனை திருமணம் செய்து கொள்வதில் தனக்கு விருப்பமில்லை என ரமணி கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மதன், இன்று காலை ரமணி பணிபுரியும் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது, பள்ளி வளாகத்தில் இருந்த ரமணியின் கழுத்தில் மதன் கத்தியால் குத்தினார். ரமணி மயங்கி விழுந்தார். பள்ளிக்குள் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள் சத்தம் போட்டு அலறினர்.
மாணவிகள் மற்றும் ரமணியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரமணி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி என்ன?
இந்நிலையில், காதல் பிரச்னையால் இச்சம்பவம் நடந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மதனும், ரமணியும் காதலித்து வந்ததாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரமணியின் பெற்றோர், அவருக்கு பெண் குழந்தை தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் ஒரு இளம் பெண்ணின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது.
إرسال تعليق
0تعليقات