மணிப்பூர் மாநிலத்தில் மைதேய் சமூகத்தினருக்கும் குக்கி இனத்தவருக்கும் இடையே வன்முறை தொடர்கிறது.
அங்கு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நவம்பர் 7 ஆம் தேதி, ஜிரிபாம் மலைப் பகுதியில் உள்ள குகி-சோ பழங்குடியினத்தைச் சேர்ந்த சைரோன் ஹமர் கிராமத்தில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் நுழைந்து அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்தனர். அதே நேரத்தில் பழங்குடியின பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
EULOGY TO OUR FALLEN HEROES
“ZOSANGKIM HMAR (50 years)
Wife of Pu Ngulthansang Hmar of Zairawn Village , Jiribam District, ManipurCause of Death:
Burnt alive by Meitei militants on 7th November, 2024 (Thursday) at 9:00 PM– 18 months since they began their Ethnic-Cleansing… pic.twitter.com/qDDSh96Qwq
— Harmeet Kaur K (@iamharmeetK) November 8, 2024
அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, உயிருடன் எரிக்கப்பட்டதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த அறிக்கை வெளியான பிறகே உண்மை வெளிவரும் என்றும் கூறுகின்றனர். இதுகுறித்து, அவரது கணவரிடம் நடத்திய விசாரணையில், “தீவிரவாதிகள் இளம்பெண்ணின் காலில் துப்பாக்கியால் சுட்டனர்
இதைத் தொடர்ந்து, எனது குழந்தைகள், எனது பெற்றோர் மற்றும் எனது மனைவி உட்பட என்னைத் தனியே வெளியேறும்படி வற்புறுத்தினார்கள். பெண்ணின் கணவர் பாலியல் வன்கொடுமை, வீட்டை எரித்தல், இன துஷ்பிரயோகம் போன்ற பிரிவுகளின் கீழ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
إرسال تعليق
0تعليقات