TVK மாநாடு கட்டுக்கடங்காத ரசிகர் மற்றும் மக்கள் கூட்டம்..

TVK மாநாடு கட்டுக்கடங்காத ரசிகர் மற்றும் மக்கள் கூட்டம்..  நடிகர் விஜய்யின் தமிழ்நாடு வெற்றிக் கழக மாநாடு மாலையில் தொடங்க உள்ளதால், காலையிலேயே அங்கு கூட்டம் அலைமோதுகிறது.

நடிகர் விஜய் தமிழ்நாடு வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இன்று அக்கட்சியின் முதல் மாநாட்டை நடத்துகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலி என்ற கிராமத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.

தமிழ்நாடு வெற்றிக் கழகம் நடத்தும் முதல் மாநாடு இது என்பதால், இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் ரசிகர்கள் விக்கிரவாண்டிக்கு குவிந்து வருகின்றனர். அவர்களுக்கான உணவு, குடிநீர் வசதிகள் தயார் நிலையில் உள்ளன. விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை அருகே தவேக மாநாட்டுத் தளம் அமைக்கப்பட்டுள்ளதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த மாநாடு இன்று மாலை நான்கு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இருப்பினும் நேற்று இரவு முதல் மக்கள் மாநாட்டு மைதானத்தில் குவிந்தனர். சிலர் இரவு அங்கே வந்து தங்கினார்கள். இந்நிலையில் இன்று மாலை நடைபெறவுள்ள மாநாட்டுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது மட்டுமின்றி, அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி உள்ளே நுழைந்துள்ளனர்.

மாலை மாநாட்டுக்காக காலையிலேயே மாநாட்டு அரங்கம் மூடப்பட்டதால், ஏற்பாட்டாளர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். மாலை வரை கூட்டம் அதிகரித்தால் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விஜய் மாநாட்டுக்கு கூட்டம் கூடுவதால் வி ரோடு பகுதி பரபரப்பாக உள்ளது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர விஜய்யின் பாதுகாப்புக்காக பவுன்சர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்

0 Response to "TVK மாநாடு கட்டுக்கடங்காத ரசிகர் மற்றும் மக்கள் கூட்டம்.."

கருத்துரையிடுக

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel