India vs Sri Lanka : சூழல் வீச்சில் தடுமாறிய இந்தியா, பொறுமையாக விளையாடி இலங்கை வெற்றி!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக பந்துவீசிய இலங்கை வீரர் ஜெஃப்ரி வாண்டர்சே 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா vs இலங்கை 2வது ஒருநாள் போட்டி: மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இலங்கை சென்றுள்ளது. முதல் போட்டி டை ஆனது. இந்நிலையில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (ஆகஸ்ட் 04) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இப்போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. இலங்கையின் அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் கமிண்டோ மெண்டிஸ் ஆகியோர் தலா 40 ஓட்டங்களைப் பெற்றனர். கடைசி ஓவரில் வெலலாகே 35 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.
241 ரன்கள் இலக்கு
241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, சப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர். சப்மேன் கில் பொறுமையாக ஆக்ரோஷமாக விளையாடி ரன் சேர்க்க, ரோஹித் ரன் வேட்டையில் ஈடுபட்டார்.
ரோஹித்தின் அரை சதம்
முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் அபாரமாக விளையாடினார். வழக்கம் போல் இலங்கை பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர்களுடன் விரட்டினார் ரோஹித். ரோஹித் ஷர்மாவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை திணறியது.
தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடிய ரோஹித் சர்மா 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஜெஃப்ரி வாண்டர்சேவிடம் ஆட்டமிழந்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் குவிப்பு
மறுமுனையில் பொறுமையாக விளையாடிய சப்மான் கில் 44 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 3 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும். ரோகித் சர்மா மற்றும் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13.3 ஓவரில் 97 ரன்கள் சேர்த்தது. அதன்பின் களம் இறங்கிய விராட் கோலி 14 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்க, இந்திய அணியின் ஆட்டத்தின் போக்கு மாறியது. இருப்பினும் அக்சர் படேல் சிறப்பாக விளையாடி 44 ரன்கள் எடுத்தார்.
இலங்கை அணி வெற்றி
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வான்டர்சேயின் சுழலை தாக்குப்பிடிக்க முடியாமல் மற்ற வீரர்கள் சில ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 42.2 ஓவர்களில் பத்து விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கையின் வாண்டர்சே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக, இந்திய ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை என்று ரோஹித் அறிவித்திருந்தார். இதனிடையே, இலங்கை அணியின் முன்னணி வீரர் ஹசரங்கா காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக ஜெஃப்ரி வாண்டர்சே அணியில் சேர்க்கப்பட்டார்.
0 Response to "India vs Sri Lanka : சூழல் வீச்சில் தடுமாறிய இந்தியா, பொறுமையாக விளையாடி இலங்கை வெற்றி!"
إرسال تعليق